ஏகாதிபத்தியம்

 ஏகாதிபத்தியம்

----------------------------

அம்பலத்தில் ஆட்டுவிப்பவனே-சிவப்புக்

கம்பளத்தில் கால் வைத்தாலும்-நீ

மும்மலத்திலும் மூழ்கிக் கிடக்கின்றாய்-எவரும்

அச்சத்தில்  அழுதிட வேண்டுமென்று

உச்சத்தில் நின்று உலுப்புகிறாய்

எச்சத்தில் ஏறித் தரித்தவனே-ஓர்

கச்சமாய் காலம் கடத்து

மிட்டா மிராசென்று மிரட்டுவாய்

-யாரிடமும்

கட்டாயக் கோபம் காட்டுவாய்-உன்

அட்டாதுட்டிக்கு அளவில்லை

கொட்டாவி விடும் கோட்டைக்காரா 

கொட்டிக்கிடக்கும் காசாலே கொட்டம் உனக்கு-கடைசியில்

ஒட்டி வைக்கும் ஒற்றை நாணயம் மட்டும் கணக்கு.

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு