Posts

Showing posts from February, 2024

தாய் மொழி

  தாய் மொழி ---------------------- கைகளின் சைகைகளிலே  கண்டிருந்த வாழ்க்கையிலே  ஒலி கொண்டு மொழி கண்டு வழி உண்டானது வளர்கையிலே  புரிதலுக்கு பயன்பட்டது-பின் நெறிப்படுத்த பண்பட்டது இலக்கணம் கருவாக -அதில் இலக்கியம் உருவானது பொழியும் புலமையோர்  எழிலாக ஏட்டினிலே  தொழிலாக்கி தொட்டனர்  அழியாத ஆளுமையை மொழியாலே முடியுமென  வழிகாட்டி வைத்தனர் அன்றுமுதல் இன்றுவரை உலக மொழியில் உயர்ந்த மொழியாய் தமிழ்மொழியை முன்மொழிந்த வள்ளுவனும் வாழ்வது எழுத்தாணியால் எழுதிய  தாய் மொழியாலே.

ஒன்றாக வாழ்வது (Living together )

 ஒன்றாக வாழ்வது (Living together ) ---------------------------‐------ இலை மறை காய் மறையாய் இருந்தது வரையறை தாண்டியே வளருது பரம்பரை பெருமை பேசியது பம்பரச் சுழலாய் போனது கலவரம் ஆனது கலாச்சாரம் -இந்த  நிலவரம் நீளும் நிலைவரும்  புரிதல் பெயரிலே புதைத்தல்-இதை பரிந்து பேசுவது படித்தல் இச்சை இங்கே கொச்சையானது-இந்த  இம்சை இங்கே இசைதலானது.

காதல் துரோகிகள்

 காதல் துரோகிகள்  ----------------------------------- ஆண்:-  நஞ்சை நாவில் தடவி நெஞ்சில் நிறைந்திருப்பான்  மஞ்சத்தில் மகிழ்ந்ததும்  வஞ்சித்து விடை பெறுவான்  பெண்:- வேசத்தில் வெற்றிபெற  பாசத்தை பற்றிடுவாள்  வேண்டியதை வசமாக்கி  வேதனை தர விசமாகிடுவாள்.