Posts

Showing posts from April, 2024

நண்பரைப் பற்றி

 வட்டாட்சியர் ----------------------- கற்றறிவை கடமைக்கு கொடுத்து பெற்றதை பிறருக்கு அளித்து-உனை பெற்றவரை புகழுக்கு அழைத்து மற்றவரை மகிழ்விக்கும் மனிதரே உற்றவன் உடன் இருக்க  உற்சவம் உனை ஈர்க்க  நற்செயல் நாளெல்லாம்  நடத்திட வற்றாத வளம் பெறுவீர் வட்டாட்சியர்🙏🙏🙏💐💐💐🤝

என் பிறப்பு

 என் பிறப்பு  --------------------- மன்னரும் மடிந்து போனார்-என்  முன்னோரும் முடியாமல் போனார்  இன்னபிறரும் இருந்ததில்லை-இந்த  ஈனனும் இடுகாடு செல்வான்-எனக்கு புண்ணியம் இல்லை புகழ்வதிலே  இன்னலும் இல்லை இகழ்வதிலே என்னவன் எனையறிவான்  ஏன் இவன் எனவும் தெளிவான்-என் கடமை கடவுள் அறிவான்-எனைக் கட்டமைத்து கதவையும் திறப்பான்  வந்த வேலை முடியவில்லை வகுத்த வழியும் மறக்கவில்லை தந்த உயிர் தயாளனிடமே தீர்ந்துவிடும் தேர்ந்தபடியே

விவசாயம்

 விவசாயம் -------------------- வாழும் காலத்தில் விசக்கசாயம் ஆனது விவசாயம் வரும் காலத்தில் வடித்த கஞ்சிக்கு  வடித்திடுவான் கண்ணீரை கெட்டும் பட்டணம் போனவனும்  கிட்டாத கஞ்சிக்காக கட்டாயம் கிராமம் வருவான் ஏறுமுகமாக இருந்தவனும் ஏரு பிடிப்பான் சோறுக்காக முதலாளி முள் வேலியாவான் பணக்காரன் பண்ணைக்காரனாவான்  ஆடம்பரம் ஆகும் உரம் பீதாம்பரம் உடுத்தியவனும் -ஒரு பருக்கைக்காக படுத்திடுவான் உழைத்து உணவு உண்ண கலப்பை காவல் கடவுளாக  நிலத்தை நம்புவான்-அந்த காலத்திற்காக காத்திருப்போம்