Posts

Showing posts from September, 2024

காவல்

 காவல் நிலையம் கரை வேட்டிக்கு  காவலர் கைகள் விரைவாக வணக்கம் முறையாக வைக்கும் நரை எட்டியவனை சிறை செல்ல திட்டி அறையோடு அவனை அறைக்கு அனுப்பும்.

தாய்-1

 தாயின் இறுதிக் கடன் ------------------------------------------ நடந்து போக நான் பிடிக்க நீட்டியவிரல் பசியாற பால் கொடுத்த தேகம் புசித்திட புகட்டிய பாகம் காலைக் கடனில் ஒன்றைக்  கழித்த குத்துக் கால்களும் இவன் அக்கம்பக்கம்  அலைந்திட வேண்டி குந்தியிருந்த கக்கமும்-நான் காயப்பட்டபோது கலங்கிய கண்களும் என்னைக்  கைக்குழந்தையாய் ஏந்தி  என் கன்னம் சாய்த்த கன்னங்களும் மகனை வாழ்த்திய வதனமும் துயில்மடிந்த மடியும்-இவை மொத்தமாய் மடிந்து மல்லாந்திருந்தாள் தீயின் பசிக்கு தாயைத் தந்தேன் திரும்பாதே என்ற தகவலுக்கு  தலைவணங்கி-நான் விரும்பிய வாழ்க்கையை  வழங்கியவளை விட்டுவிட்டு  வருந்திய படியே   வெறும் கையோடு  வீடு திரும்பினேன்..... சந்ததி காண சாம்பலைத் தின்றவள்-ஆண்டவன் சந்நிதி காண  சாம்பலாகிப் போனாள்.

கோணங்கித்தனம் அல்லது வறட்டு பிடிவாதம்

 கோணங்கித்தனம் ---------------------------------- நாய் வளர்த்தேன் பூனை வளர்த்தேன் நாளும் அதோடு அன்பை வளர்த்தேன் தாய் வெறுத்தேன் தந்தை வெறுத்தேன் தாங்கிப் பிடித்த பாசம் வெறுத்தேன் நாய் கடித்த காயம் மறந்தேன்  நானும் அதனை கொஞ்சி மகிழ்ந்தேன் பூனை கிழித்த கோபம் இல்லை பாலும் மோரும் பருகும் பிள்ளை அம்மை அடித்தாள் அன்பைக் கொடுத்தாள் அப்பன் அடித்தான் அறிவுரை கொடுத்தான் இருந்தும் இருவரை வெறுக்கலானேன் இறந்தும் இதுவரை இறுக்கமானேன் என்ன இந்த புத்தி?  என்னை அறுக்கும் கத்தி.

ஏகாதிபத்தியம்

 ஏகாதிபத்தியம் ---------------------------- அம்பலத்தில் ஆட்டுவிப்பவனே-சிவப்புக் கம்பளத்தில் கால் வைத்தாலும்-நீ மும்மலத்திலும் மூழ்கிக் கிடக்கின்றாய்-எவரும் அச்சத்தில்  அழுதிட வேண்டுமென்று உச்சத்தில் நின்று உலுப்புகிறாய் எச்சத்தில் ஏறித் தரித்தவனே-ஓர் கச்சமாய் காலம் கடத்து மிட்டா மிராசென்று மிரட்டுவாய் -யாரிடமும் கட்டாயக் கோபம் காட்டுவாய்-உன் அட்டாதுட்டிக்கு அளவில்லை கொட்டாவி விடும் கோட்டைக்காரா  கொட்டிக்கிடக்கும் காசாலே கொட்டம் உனக்கு-கடைசியில் ஒட்டி வைக்கும் ஒற்றை நாணயம் மட்டும் கணக்கு.