Posts

Showing posts from July, 2024

நல்லுலகம்

 நல்லுலகம்  ---------------------- நல்லவனாக நானிருந்தேன் நாடென்னை தழுவிக் கொண்டது நயவஞ்சகனாகி நானியிருந்தேன் நாடி அது நழுவ விட்டது உள்ளத்தில் உண்மையிருந்தது உடனிருப்பாரிடம் உரிமையிருந்தது கள்ளத்தனம் கறை படிந்தது கையெடுத்தோர் கம்பெடுத்தார் வில்லத்தனம் விளக்கொளியல்ல- அதை விட்ட தினம் விடிவெள்ளி போல வாய்மையுடன் வாழ்ந்திருந்தால்-நம்மை வறுமையிலும் வணங்கியிருப்பார்

தந்தை-1

 தந்தை ------------- கண்மூடிக் காணுகின்றேன் காலத்தைப் பின்னோக்கி  மண் மூடி மறைந்தவர்-இந்த மக்களைக் கண்டு மகிழ்ந்தவர் சுதந்திரம் தந்த சுந்தரர்  தந்திரம் அறியா தந்தையார் வேலை முடித்து  வீடு திரும்பும் வேளை தோழரோடு தேநீர் தேவையில்லை-தன்  பாலகரோடு பருகினால்  போதும் என்பார் சிறிய விசயமாக சிலருக்கு படலாம்- அதில் அரிய அப்பனின் அன்பை அறியலாம்-அப்படி நினைத்த நல்லவரின் நினைவு நாள் இன்று கால ஓட்டத்தில் காலனின்  கயமைத்தனம் கடந்து போனாலும அப்பாவை நினைவு கூறும்  அடியொத்த செயல்கள் எல்லோருக்கும் ஏதோவொன்று எப்போதும் இருக்கும் அப்போது அழுவோம்-நினைவை தப்பாமல் தழுவுவோம்.

இணையம்

 இணையம் --------------------- இணையத்து செய்தி இதயத்தை தொடுவதில்லை வாசித்த செய்திகளும் வசதிக்கு வரித்தனவே பயிற்றுவித்த பதிவும் உண்டு  பயமுறுத்திய பதிவும் உண்டு கற்றிடக் களமும் உண்டு காற்றில் கரைவதும் உண்டு பற்றுடன் பகிர்வோரும் உண்டு புற்றிலே பார்த்ததும் உண்டு  அன்னப்பறவை போல்  நீரை விலக்கி பாலைப் பருகி வாழும் உயிரினம் போல் நாளும் நாம் இருப்போம்