தந்தை-1

 தந்தை

-------------

கண்மூடிக் காணுகின்றேன்

காலத்தைப் பின்னோக்கி 

மண் மூடி மறைந்தவர்-இந்த

மக்களைக் கண்டு மகிழ்ந்தவர்

சுதந்திரம் தந்த சுந்தரர் 

தந்திரம் அறியா தந்தையார்

வேலை முடித்து வீடு திரும்பும் வேளை

தோழரோடு தேநீர் தேவையில்லை-தன் 

பாலகரோடு பருகினால் போதும் என்பார்

சிறிய விசயமாக

சிலருக்கு படலாம்- அதில்

அரிய அப்பனின்

அன்பை அறியலாம்-அப்படி

நினைத்த நல்லவரின்

நினைவு நாள் இன்று

கால ஓட்டத்தில் காலனின் 

கயமைத்தனம் கடந்து போனாலும

அப்பாவை நினைவு கூறும் 

அடியொத்த செயல்கள்

எல்லோருக்கும் ஏதோவொன்று

எப்போதும் இருக்கும்

அப்போது அழுவோம்-நினைவை

தப்பாமல் தழுவுவோம்.

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு