நல்லுலகம்

 நல்லுலகம் 

----------------------

நல்லவனாக நானிருந்தேன்

நாடென்னை தழுவிக் கொண்டது

நயவஞ்சகனாகி நானியிருந்தேன்

நாடி அது நழுவ விட்டது

உள்ளத்தில் உண்மையிருந்தது

உடனிருப்பாரிடம் உரிமையிருந்தது

கள்ளத்தனம் கறை படிந்தது

கையெடுத்தோர் கம்பெடுத்தார்

வில்லத்தனம் விளக்கொளியல்ல- அதை

விட்ட தினம் விடிவெள்ளி போல

வாய்மையுடன் வாழ்ந்திருந்தால்-நம்மை

வறுமையிலும் வணங்கியிருப்பார்

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு