Posts

Showing posts from May, 2024

கவிதைகள்

கவிதைகள் ---------------------- என் கறை துடைக்கும் கைக்குட்டைகளே  எனை அக்கறையுடன் அரவணைக்கும் அன்னையாரே-நான் துவந்த தருணத்தில் தோழமையாக-மனம் உழண்ட போது உறக்கமாக  வெகுண்ட நேரத்தில் வாளாக-நா வறண்ட வேளை வான்மழையாகவும் வந்தாயே  அழுத சமயம் ஆறுதலாக அடுத்த நிமிடம் அன்புக்கரங்களாக மற்றவர் தவிர்த்த போது தாயாக  மனதில் தவித்த போது தாலாட்டாக என் உயிரோடு உலவிடும் நீ-நான் உயிர்விடும் வரை உடன் வர என்ன செய்ய வேண்டும்? உரைத்திடுவாய்.

Nature

 இயற்கை ------------------ இமைக்க இசைந்திடா இமயத்தின் இயல்பு   வர்ணிக்க முடியாத வர்ணங்கள்  வாசலுக்கு வராத வளமை வியப்பை வழங்கும் விருட்சம் ஏராளமான எண்ணங்களை  தாராளமாய் தருகின்றன இறைவன் தந்த இயற்கை இயங்கும் உலக இடுகை .