கவிதைகள்
கவிதைகள் ---------------------- என் கறை துடைக்கும் கைக்குட்டைகளே எனை அக்கறையுடன் அரவணைக்கும் அன்னையாரே-நான் துவந்த தருணத்தில் தோழமையாக-மனம் உழண்ட போது உறக்கமாக வெகுண்ட நேரத்தில் வாளாக-நா வறண்ட வேளை வான்மழையாகவும் வந்தாயே அழுத சமயம் ஆறுதலாக அடுத்த நிமிடம் அன்புக்கரங்களாக மற்றவர் தவிர்த்த போது தாயாக மனதில் தவித்த போது தாலாட்டாக என் உயிரோடு உலவிடும் நீ-நான் உயிர்விடும் வரை உடன் வர என்ன செய்ய வேண்டும்? உரைத்திடுவாய்.