கவிதைகள்

கவிதைகள்

----------------------

என் கறை துடைக்கும் கைக்குட்டைகளே 

எனை அக்கறையுடன் அரவணைக்கும் அன்னையாரே-நான்

துவந்த தருணத்தில் தோழமையாக-மனம்

உழண்ட போது உறக்கமாக 

வெகுண்ட நேரத்தில் வாளாக-நா

வறண்ட வேளை வான்மழையாகவும் வந்தாயே 

அழுத சமயம் ஆறுதலாக

அடுத்த நிமிடம் அன்புக்கரங்களாக

மற்றவர் தவிர்த்த போது தாயாக 

மனதில் தவித்த போது தாலாட்டாக

என் உயிரோடு உலவிடும் நீ-நான்

உயிர்விடும் வரை உடன் வர

என்ன செய்ய வேண்டும்? உரைத்திடுவாய்.

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு