என் பிறப்பு
என் பிறப்பு
---------------------
மன்னரும் மடிந்து போனார்-என்
முன்னோரும் முடியாமல் போனார்
இன்னபிறரும் இருந்ததில்லை-இந்த
ஈனனும் இடுகாடு செல்வான்-எனக்கு
புண்ணியம் இல்லை புகழ்வதிலே
இன்னலும் இல்லை இகழ்வதிலே
என்னவன் எனையறிவான்
ஏன் இவன் எனவும் தெளிவான்-என்
கடமை கடவுள் அறிவான்-எனைக்
கட்டமைத்து கதவையும் திறப்பான்
வந்த வேலை முடியவில்லை
வகுத்த வழியும் மறக்கவில்லை
தந்த உயிர் தயாளனிடமே
தீர்ந்துவிடும் தேர்ந்தபடியே
Comments
Post a Comment